புதுதில்லி: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் டிஜஜி ரூபா.
இவரை கர்நாடக அரசு நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்தது. இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் பதாகைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேர்மையான அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.