தற்போதைய செய்திகள்
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் வெங்கய்ய நாயுடு
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கய்யா நாயுடு இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுதில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கய்யா நாயுடு இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தில்லியில் தேர்தல் அதிகாரியிடம் அவர் மனு தாக்கல் செய்யும் போது, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித் ஷா, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற பா.ஜ.க ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்ட உடன் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாம செய்தார்.