குஜராத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை வான்வழி ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். முன்னதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இன்று காலை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது குஜராத் வந்து வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நேரில் பார்வையிட அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து குஜராத் சென்ற பிரதமர் அங்கு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் விஜய் ரூபானி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.