மும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 18 புள்ளிகள் குறைந்து 32,228 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து 9,964.55. புள்ளிகளாகவும் இருந்தது.
வர்த்தக நேரதுவக்கத்தில் வரலாற்றில் முதல்முறையாக என்.எஸ்.இ நிஃப்டி 10,000 புள்ளிகளை தாண்டியது. எனினும் வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து 9,964.55. புள்ளிகளாக இருந்தது. சென்செக்ஸ் குறியீடு எண்ணும் காலையில் 66 புள்ளிகள் உயர்ந்து உச்சத்தில் இருந்தது.
பாரதி ஏர்டெல் லிமிட்டெட், ஆக்ஸிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 2.14%, 1.44%, 1.30%, மற்றும் 1.24% சதவீதங்களில் லாபம் ஈட்டின.