கிரீஸில் ஏஜியன் கடற்கரையொட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என்றும் கிரேக்க நகரமான ப்லோமாரிக்கு தெற்கே, லெஸ்போவு அருகில் 5 கிலேமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. எனினும் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.