சென்னை: சாமளாபுரத்தில் பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பிக்கு பதவி உயர்வு ஏன் என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி சாமளாபுரத்தில் பெண்களை ஏ.எஸ்.பி அடிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் அவர் பேசும் போது தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.