இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

கும்ளேவின் பயிற்சியாளர் பதவி காலம் இந்த மாதத்தோடு முடிய உள்ள நிலையில், அவரின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதோடு, பிசிசிஐ தொடர்ந்து நீடிக்கச் சொன்னாலும் அதை ஏற்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.

'புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணி கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணி தாமதமாவதால், மேற்கிந்தியத் தீவுகள் தொடர் வரை பயிற்சியாளராக நீடிக்குமாறு கும்ப்ளேவிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com