எம்எல்ஏக்கள் பேரம் பேசியதாக ஸ்டாலின் கூறியுள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

எம்எல்ஏக்கள் பேரம் பேசியதாக ஸ்டாலின் கூறியுள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை :  எம்எல்ஏக்கள் பேரம் பேசியதாக ஸ்டாலின் கூறியுள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: -

சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாதகமாக செயல்பட எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டது என்பதற்கான வீடியோ தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வெளியானது.

இதனை அடுத்து ஆளுநரை சந்தித்த சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டுள்ளார். எனவே எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com