மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக 2007 மற்றும் 2012 குடியரசுத் தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதிபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜியை சிவசேனா ஆதரித்து இருந்தது.
இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்களது முடிவு தனிபாணியாக இருக்கும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார்.