சிட்னி: சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது விமானத் தாக்குதலை மீண்டும் தொடர ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சம் இன்று வெளியிட்டுள்ளது.
சிரிய வான் எல்லையில் எங்களது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக கடந்த செவ்வாய் அன்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்திருந்தார். ஆனால் அதை இப்போது திரும்பப் பெற்றுள்ளது.