சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
மீராகுமாரின் தேர்வு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க இவர் தான் சரியான தேர்வு என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிலைப்பாடு வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.