திருவண்ணாமலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று வரவேற்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா மற்றும் அதிமுக எம்பி.,க்கள் மோகன், வனரோஜா ஆகியோரும் உடனிருந்தனர்.
இதன்பின், அங்கிருந்து ரமண மடத்திற்குச் சென்ற அமித் ஷா, அங்கு 40 நிமிடங்கள் வழிபாடு நடத்தினார். அங்கிருந்து, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரல் கோவிலுக்குச் சென்ற மோடி, சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு, சென்னை நோக்கி புறப்பட்டார்.