திருநெல்வேலி: நெல்லையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநில உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இட ஒதுக்கீடு குறித்த பிரச்னை சரி செய்யப்பட்டது. கடந்த 2016ல் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் பெறப்பட்ட டெபாசிட் தொகை தற்போது திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.