முன்னாள் விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவிக்கு இலங்கை வடக்கு மாகாண அமைச்சரவையில் பதவி

இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சிலில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சிலில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. வடக்கு மாகாண முதல்வர்  சி.வி. விக்னேஸ்வரன் மகளிர் மறுவாழ்வு மற்றும் விவகார துறை அமைச்சராக ஆனந்தி சசீதரனை நியமித்துள்ளார்.

இலங்கையில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல் பிரிவின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் வேலாயுதம் சசிதரன் என்ற எழிலன். உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் சசிதரன் காணாமல் போனார். அவரது நிலை என்ன என்பது இன்று வரை புதிராகவே உள்ளது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வரை மனு 
அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சசிதரனின் மனைவி ஆனந்தி இலங்கை வடக்கு மாகாண அரசில் புரணமைப்பு மற்றும் மகளிர் விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com