உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் திருவள்ளூரில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அண்மையில் நடைபெற்ற உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பகல் 12 மணியளவில் உத்தரபிரதேசம், உத்தரகான்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்தது. இதை தொடர்ந்து திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர்கள் தா.பாலாஜி, கருணாகரன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சுகுதேவ், ஆர்யா சீனிவாசன், ரகுராமன், ராஜேந்திரன் ஆகியோர் திருவள்ளூர் காமராஜர் சிலை, ஆவடி சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியின் போது பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.