ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மனோஜ்பாண்டியன் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் நேரில் வழங்கியுள்ளார். மனுவில் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அதிருப்தி அணி சார்பாக அந்த அணியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.