நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, அதே உற்சாகத்துடன் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராகவே உள்ளது.
இத்தேர்தலுக்கான முக்கிய வியூகங்களை வகுப்பதற்காக பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் அடுத்தமாதம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோசி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அடுத்த ஆண்டு கர்நாடகா, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தல்களிலும் வென்று ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க தீவிர முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.