ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, அதிமுக அம்மா கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சித் தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி ஏற்கெனவே 152 பேர் அடங்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், கூடுதலாக முன்னாள் அமைச்சர்கள், வாரியத் தலைவர்களான கடம்பூர் ஜனார்த்தனம், முருகையாபாண்டியன், எம்.ஆனந்தன், செல்வி ராமஜெயம், வளர்மதி ஜெயராஜ், க.பொன்னுசாமி, கோமதி சீனிவாசன், டி.இன்பத்தமிழன், எஸ்.கலைச்செல்வன், சிந்து ரவிச்சந்திரன், ஆர்.பி.ஆதித்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.