புதுச்சேரி மாநில மக்களுக்கு தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி) வாழ்த்துகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
உகாதி என்பது, தெலுங்கு, கன்னட மக்களின் வசந்த காலத் தொடக்கமாகும். உகாதி பச்சடி, இனிப்புகள் போன்றவற்றுடன் கசப்பையும் உண்டு கொண்டாடப்படும் இப்பண்டிகை மூலம் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சி, சவால்களை பெருந்தன்மையாக ஏற்க வேண்டும்.
உகாதி நன்னாள் மூலம் புதுவை வாழ் மக்களுக்கு அமைதி, வளம், சுகாதாரமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.