ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக (புதஅ) வேட்பாளர் இ.மதுசூதனை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கொருக்குப்பேட்டை பாரதி நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் போராடி வருகிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெருவோம்.
பிறகு ஒரிரு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். அதன்பின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவோம் என்றார் பன்னீர் செல்வம்.