தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்: கனிமொழி

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஆலந்தூர்: தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 16 நாட்களுக்கு மேலாக தில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். பிரதமர் விவசாயிகளை சந்திக்க தயாராக இல்லை. அவர் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை.

அதுபோல் தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பிரச்சினைகளை தீர்க்க வில்லை என்றால் மக்கள் போராட்டமாக அது மாறும். மக்கள் இனி பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com