சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் தில்லியில் தொடர்ந்து பதினாறாவது நாளாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வடமாநில விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் தமிழக விவசாயிகள் யாரும் அநாதை அல்ல என்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: -
விவசாயிகளுக்கு அனைத்து இந்திய ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும். முல்லை பெரியாறு, பவானி ஆறு, தாமிரபரணி ஆறு, காவிரி ஆறு, கண்டலேறு, கிருஷ்ணா ஆறு! எல்லோரும் கைவிட்டுவிட்டால் தமிழகம் வாழ்வது எவ்வாறு? நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை நாம் அநாதைகளாக விட்டுவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.