புதுதில்லி: மக்களவையில் இன்று ஜிஎஸ்டி மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவின் நான்கு பிரிவுகளின் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச ஜிஎஸ்டி மற்றும் பொது ஜிஎஸ்டி மசோதாக்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.