சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர் தே.க.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது:
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு இப்போது அவசியமில்லை என்றார் அவர்.