மதுரை: மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் கோவிந்தசாமி வீட்டில் இருந்த 80 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் கோவிந்தசாமியும் அவரது மனைவி ஆஷா தேவியும் வெளியூர் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்து.
இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவஇடத்துக்கு விரைந்த வந்து பார்வையிட்ட போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.