காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோப்பியான் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் புகுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோப்பியான் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் புகுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸாரை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகளை எடுத்து சென்றுள்ளனர்.

மேலும், மொந்தார் பூஞ்ச் மாவட்டம் மான்கோட் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீதும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்திய வீரர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையால் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் 2வது முறையாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com