மேட்டூர்: மேட்டூர் அனல் மின்நிலைய 2வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகளும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதன்கிழமை 2வது அலகில் கொதிகலன் குழாயில் பழு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. பொறியாளர்கள் பழுதை நீக்கியதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கி உள்ளது.