சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலையடுத்து, போலீஸார் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நள்ளிரவு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு வந்த மிரட்டலையடுத்து, குஷ்புவின் பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு சென்ற போலீஸார், அங்கு சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது குஷ்பு குடும்பத்துடன் வெளிநாட்டில் இருந்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.