நெல்லை: கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.