சுரங்க முறைகேடு: முன்னாள் அமைச்சர் ஜனார்தனரெட்டியிடம் சிறப்பு புலனாய்வு படை விசாரணை

முன்னாள் அமைச்சர் ஜனார்தனரெட்டியிடம் சுரங்க முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணை செய்தனர்.

பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ஜனார்தனரெட்டியிடம் சுரங்க முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணை செய்தனர்.
ஜந்தகல் சுரங்க முறைகேடு தொடர்பான முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் நேற்று சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜந்தகல் சுரங்க முறைகேட்டில் குமாரசாமி ரூ. 150 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என சட்டப்பேரவையில் முன்பு குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் ஜனார்தனரெட்டிக்கு சம்மன் அனுப்பி சுரங்க முறைகேடு தொடர்பான விசாரணையில் ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு படை கேட்டுக் கொண்டது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வு படையினர் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com