கல்வி வியாபாரமாக இருக்கும் வரை கல்வியின் தரம் உயராது: ப.சிதம்பரம் 

கல்வி வியாபாரமாக இருக்கும் வரை கல்வியின் தரம் உயராது தூத்துக்குடியில் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

தூத்துக்குடி: கல்வி வியாபாரமாக இருக்கும் வரை கல்வியின் தரம் உயராது தூத்துக்குடியில் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

தேசிய செம்மல் A.P.C.வீரபாகுவின் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசும் போது தூத்துக்குடி மக்களுக்கு A.P.C.வீரபாகு ஆற்றிய கல்வி சேவையை புகழ்ந்து பேசியதோடு இன்றைய சூழலில் கல்வி வியாபரம் ஆகிவிட்டதையும் சுட்டிக் காட்டினார்.

அரசும், உச்சநீதிமன்றமும் சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் கல்வி வியாபாரமாகவே உள்ளது. மாணவர்கள் தரமான கல்வியை கற்க முடியவில்லை என ப.சிதம்பரம் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com