திருச்சி: அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தில்லி ஜந்தர்மந்தரில் நாளை (21ம் தேதி) நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழகத்தின் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையில் 15 விவசாயிகள் திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் தில்லி புறப்பட்டு சென்றனர். தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் உள்பட 28 மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் 300 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் தொடர் அகிம்சை போராட்டம் நடத்தலாமா அல்லது 10 லட்சம் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகத்தை தினமும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாமா என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.