மூன்று வண்ணங்களில் மாறுகிறது அரசு பள்ளி மாணவர்களின் சீருடை: அமைச்சர் தகவல் 

அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மூன்று வண்ணங்களில் இருக்கும் வகையில் புதிய சீருடைகள் கொண்டுவரப்படும்.

இதுகுறித்து இன்னும் 2 மூன்று தினங்களில் அரசாணை வெளியிடப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com