நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, நெடுவாசல் மக்கள் ஏப். 12-இல் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். நேற்று 39வது நாளாக நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் பியூஷ் மனுஸ், திரைப்பட இயக்குநர் களஞ்சியம் ஆகியோரும் பங்கேற்றனர்.