சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தரை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர். எம். லோதா தலைமையிலான மூன்று பேர் கொண்ட புதிய குழு ஒன்றை அமைத்து ஆளுநர் வித்தியாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்ட மோகன், கருணாமூர்த்தி, ஜெயகுமார் ஆகியோரை ஆளுநர் நிராகரித்தார்.