திருவனந்தபுரம்: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதை கேரள அரசு ஏற்காது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறும் போது மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தாமல் மத்திய அரசு விதிக்கும் புதிய சட்டதிட்டங்களுக்கு உடன்பட முடியாது என்றும் மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்கள் கேரளாவில் அதிக பேர் உள்ளதால் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டு எழுத்தியுள்ளார்.