புதுதில்லி: தில்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதையடுத்து கேஜ்ரிவால் அரசு மீண்டும் ஒற்றை இலக்க வாகன பயன்பாடு முறையை நாளை முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிகிறது.
தில்லியில் காற்று மாசுபாடு காரணமாக செவ்வாய்க்கிழமை மிக மோசமான பனிப்புகை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளான நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைக் கண்டித்துள்ளது,
2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி பொறுப்பேற்ற போது அங்கு
கார் – ஸ்கூட்டர்களில் ஒற்றை இலக்க வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க வாகனங்கள் மற்றொரு நாளும் போக வேண்டும் என்றனர்.
மேலும் நகரின் ஐந்து இடங்களில் மாபெரும் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுவோம், பனிப்படலத் திரையை ஏற்படுத்துவோம், மெய்நிகர் புகைபோக்கிகளை அமைப்போம் என்று தெரிவித்திருந்தனர். இவை எதுவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படாத நிலையில் தற்போது தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து கேஜ்ரிவால் அரசு மீண்டும் ஒற்றைப்படை முறையை நாளை முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு தில்லி காற்று மாசு ஏற்பட பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள்தான் மிக முக்கிய காரணம் என்று தில்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.