ஈராக் ராணுவ ஹெலிகாப்டரில் திடீர் விபத்து: 7 பேர் பலி

ஈராக்கில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென கீழே விழுந்து நொறுங்கி

பாக்தாத்: ஈராக்கில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 

ஈராக் நாட்டில் ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ-17 ரக ராணுவ ஹெலிகாப்டர் இன்று ஞாயிற்றுக்கு கிழமை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது கட் மாகாணத்தின் அருகே பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகள் மற்றும் ஐந்து ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக  ஈராக் விமானப்படை அதிகாரி  தெரிவித்துள்ளார். 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com