இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பிச்சை என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு படகும் அதில் இருந்து மீனவர்களும் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்படுவதாக கரைக்குத் திரும்பிய மீனவர் இருதயம் என்பவர் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை நமது கடற்படையினர் ஏன் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.