சிவகாசியில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளர் இன்று கைது செய்யப்பட்டார்.
சிவகாசி நேருஜி நகரைச் சேர்ந்த பொன்னுசாமி (55) என்பவரிம் மூன்று ஆள்துளை கிணறு அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. நகராட்சி ஒப்பந்ததாரரான இவரிடம் அதற்காக 7 சதவீதம் லஞ்சம் கேட்ட பொறியாளர் குறித்து புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சீனிவாச பெருமாள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறியாளரை கைது செய்தனர்.
முன்னதாக முதல்தவணையாக 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் அந்த பொறியாளர் வீட்டிற்குச் சென்ற ஒப்பந்தாரரிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்க செய்து கையோடு கைது செய்தனர்.