தமிழகத்தில் 7- ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி
கோவை காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை நகர புதிய ஆணையராக பெரியய்யாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் ஆணையராக இருந்த அருண் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நிர்வாக ஐ.ஜியாக வெங்கடராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை காவல் நிர்வாக ஐ.ஜி.தினகரன் எஸ்டாபிளிஸ்மென்ட் ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.யாக சேனல் வி.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக அமாநத் மன் இடமாற்றம் செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.