புதுவை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 இளைஞர்கள் சாவு

புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

புதுச்சேரி:  புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருபுவனையை சேர்ந்தவர் அமரன் மகன் மோகன் (24) தனியார் நிறுவன ஊழியர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பரத் (21) மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் 3 ம் ஆண்டு பயின்று வந்தார்.

நண்பர்களான இருவரும் செவ்வாய்க்கிழமை காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் திருபுவனையில் இருந்து புதுவைக்கு வந்துக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி வர, பரத் பின்னால் அமர்ந்து வந்தார்.

வடமங்கலம் அருகே அவர்கள் வந்தபோது பின்னால் வேகமாக வந்த வேன் எதிர்பாராவிதமான இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது வேன் ஏறி இறங்கியது. இதில் பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த மோகனை உடனே கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர வல்லாட், சப்}இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com