இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட கடலோர காவல்படை வீரரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும் மீனவர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.