ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது: நாராயணசாமி பேட்டி

மத்திய அரசின் தவறான நிர்வாக நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றவர் ராகுல்காந்தி பிரதமராக
ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: மத்திய அரசின் தவறான நிர்வாக நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றவர் ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா இன்று செவ்வய்க்கிழமை கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். 

நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

மத்திய அரசின் தவறான நிர்வாக நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது, மாநிலங்களுக்கிடயே பாரபட்சம் காட்டி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியை தடுக்கும் வேலையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மக்களை ஏமாற்றி மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது, ஜிஎஸ்டியால் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு எதிர்க்கட்சிகளை எதிர்க்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. 

இதுவரை 20 முறை மத்திய அரசை அணுகி புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி கேட்டும் செவிசாய்க்கவில்லை. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு முடக்க நினைக்கிறது மத்திய அரசு.

எதிர்கட்சிகளை சிபிஐ மற்றும் வருமானவரித்துறை மூலம் முடக்க நினைக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது.

வெவ்வேறு துறைகளில் அரசு ஊழியர்கள் பணிமாற்றத்தின் மூலம் வேலை செய்வது குறித்து விசாரிக்க ஆளுநர் கூறியுள்ளார். முதலில் ஆளுநர் மாளிகையில் வேறு துறைகளைச் சேர்ந்த 64 பேர் பணிபுரிவது குறித்து அவர் விளக்கட்டும். நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் மூலம் மாநில அரசை பணிய வைக்க முடியாது என்றார் நாராயணசாமி.

அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜஹான், சட்டப்பேரவை துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நேருவின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார் முதல்வர் நாராயணசாமி. .

இதேபோல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேருவின் திரு உருவப் படத்திற்கு மாநில தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள நேருவின் சிலைக்கு முதல்வர்ர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com