புதுச்சேரி: ரூ. 3 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை பெற இளம் வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என சட்டத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி பார் அசோசியஷேன் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த உதவித்தொகையினை பெற இளம் வழக்குரைஞர்கள் வரும் 20 ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட 4 பிராந்தியங்களைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்களின் தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலை பார் அசோசியேஷன் துரிதமாக அனுப்ப வேண்டும். இதற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.