ஆளுநர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

தமிழக ஆளுநர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறு இல்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம். 
ஆளுநர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

தமிழக ஆளுநர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறு இல்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம். 

கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது மாநில சுயாட்சியை பாதிக்கும் செயல் அல்ல என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளை மட்டும் நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

தமிழகத்தில் இதுவரை பதவி வகித்த எந்த ஆளுநரும் அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை. இந்த நிலையில், கோவையில் அரசு அதிகாரிகளை அழைத்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அமைச்சர்களை புறக்கணித்து அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது கோவை மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தான். இதில் எந்த தவறு இல்லை. 

இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்துதான் விவாதிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்கள் வேகமாகக் கிடைக்க, ஆளுநருடன் இணைந்து செயல்படுவது ஆரோக்கியமானதுதான். இதை மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகக் கருத முடியாது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களை புறக்கணித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ஆளுநர் கோவை வந்தவுடன் அவருக்கு வரவேற்பு கொடுத்து நேரில் சந்தித்து பேசினேன், அதே போல் தற்போதும் அவரை சந்தித்து மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய பல்வேறு விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நேரடியாக ஆலோசனை மேற்கொள்வது நமக்கு ஆரோக்கியமான விசயம் தான் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com