தற்போதைய செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக சத்ருகன புஜாஹரி நியமனம்!
ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த சத்ருகன புஜாஹரி சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த சத்ருகன புஜாஹரி சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை 53 பேர் நீதிபதிகளாக பதவி வகித்து வரும்நிலையில், ஒடிசாவை சேர்ந்த சத்ருகன புஜாஹரி சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து, சத்ருகன புஜாஹரி வரும் 20-ஆம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது நியமனத்தை தொடர்ந்து சென்னை நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.