மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது; புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோயில் நடையை திறந்தார்.
கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக 41 நடைபெறும் பூஜை மண்டல பூஜை என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஒரு நாள் முன்பாகவே (நாளை 16) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதற்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
முதல் நாளே பல ஆயிரம் பக்தர்கள் குவிந்துள்ளனர். தொடந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.