சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வாரி பண்டாரி மீண்டும் தேர்வு

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐ.நா.சபை அதிகாரிகள்
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வாரி பண்டாரி மீண்டும் தேர்வு

வாஷிங்டன்: சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் இந்தியாவின் தல்வீர் பண்டாரி நீதிபதியாக இருந்து வரும் பண்டாரியின் பதவிக்காலம் 2018 பிப்ரவரியில் முடிகிறது. 

இந்நிலையில், 15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த நீதிமன்றத்தில் கடைசி ஒரு இடத்துக்கு தற்போது அங்கு நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரியும் (70), இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட்டும் (62) மோதுகின்றனர்.

இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த 2 வாரங்களாக இரண்டு சுற்றுக்களுக்கான தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மைக்கான ஆதரவு கிடைத்தது.

ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிரீன் உட்டுக்கு மெஜாரிட்டி கிடைத்தது. அங்கு அவருக்கு 9 ஓட்டுகள் கிடைத்தன. ஆனால் பண்டாரிக்கு 5 வாக்குகள்தான் கிடைத்தன.

சர்வதேச நீதிமன்றத்தின் சட்டதிட்டப்படி ஐ.நா. பொதுச்சபையிலும், பாதுகாப்பு சபையிலும் பெரும்பான்மை பெறுகிறவர்தான் நீதிபதி பணி இடத்துக்கு தேர்வு பெற முடியும். தற்போதைய நிலவரப்படி தல்வீர் பண்டாரியா, கிரீன் உட்டா என்பதில் தொடர்ந்து இழுபறி நிலைதான் நீடித்து வந்தது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபையும், பாதுகாப்பு சபையும் நேற்று திங்கள்கிழமை (நவ21) கூடியது. நீதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட் நீதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐ.நா. பொதுச்சபை தலைவரின் செய்தி தொடர்பாளர் பிரேந்தன் வர்மா தெரிவித்துள்ளார். இவரது பதவிக்காலம் 2027 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச நீதி மன்றத்தில் நீதிபதிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய நீதிபதி தல்வாரி பண்டாரியேவுக்கு, வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வந்தே மாதரம் என தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் கிரீன் உட் போட்டியிலிருந்து விலக இந்தியா எடுத்த ராஜாங்கரீதியிலான நடவடிக்கை காரணம் என்று தூர்தர்ஷன் குறிப்பிட்டுள்ளது. 

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாவதற்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அவர் இருந்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டில் அவர் இப்பதவிக்கு முதன்முதலில் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் கிரீன் உட் போட்டியிலிருந்து விலக இந்தியா எடுத்த ராஜாங்கரீதியிலான நடவடிக்கை காரணம் என்று தூர்தர்ஷன் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com