இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும்: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும்: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு மாதாமாதம் புரோகிதர்களை வைத்து திதி கொடுப்பது வழக்கம், அதன் அடிப்படையில் வரும் 5-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாள் வருவதால் இன்று திதி கொடுக்க வந்த புரோகிதர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். 

வருமான வரித்துறை சோதனையின் போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வேதா இல்லம் இல்லை என கூறியவர்கள் தற்போது இவ்வளவு போலீஸாரை எதற்காக குவித்துள்ளார்கள்?'' என்று  வெற்றிவேல் கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில்  இதுகுறித்து பேசிய தினகரன். திதி கொடுப்பதை தடுக்க முயன்றவர்கள், போயஸ் இல்லத்தில் சோதனை நடந்ததை ஏன் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் போயஸ் தோட்ட இல்லத்தில் 2 அறைகளில் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com